கொழும்பு இரத்தினபுரி வீதியில்
திவுரும்பிட்டிய கட்டஹட்ட பிரதேசத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து இரத்தினபுரி நோக்கியும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கியும் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பயணிகள் குழுவொன்று காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் கொழும்பில் இருந்து இரத்தினபுரி நோக்கிச் சென்ற பேருந்தின் நடத்துநரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.