நாட்டு அரிசியை மறைத்து வைத்திருந்த அரிசி மொத்த வியாபாரி ஒருவரை கினிகத்தேனை பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுவரெலியா நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
கினிகத்தேன பிரதேசத்தில் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கடையில் இன்று (20) திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கடையில் இருந்து 10 கிலோ கிராம் நாட்டு அரிசி 21 மூடைகள் உட்பட 05 கிலோ கிராம் நாட்டு அரிசி உள்ளிட்ட 360 கிலோ கிராம் நாட்டு அரிசி கண்டுபிடிக்கப்பட்டது.
