சிவனடிபாத மலைக்கு புனிதயாத்திரை சென்ற பெண் ஒருவர் உயிரிழப்பு..
இன்று காலை சுமார் 10.00 மணி அளவில், சிவனடிபாத மலைக்கு புனித யாத்திரை சென்று திரும்பிய பெண் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்ததுடன், அவரது சடலம் தற்போது மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணித்தவர் குருப்பு ஆராச்சிகே கெருதத்தி (61)மஹாவில,ஹெயன்துடுவ என பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற அதேவேளை
இது இந்த யாத்திரை காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது மரணம் சம்பவமாகும்.
மஸ்கெலியா நிருபர்.
