சவூதி நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய வளாகம் இன்று திறப்பு..
சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிட வளாகம், நாளை (04) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜனகி ராஜரத்ன உள்ளிட்ட அரச மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயரதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் இரத்தினபுரி புதிய நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடத் திட்டம், சுமார் 70.46 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 50 மில்லியன் அமெரிக்க டொலர் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் சலுகைக் கடனாகவும், மீதித் தொகை இலங்கை அரசின் பங்களிப்பாகவும் வழங்கப்பட்டுள்ளது.
நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ பீடத்தில், முதல் கட்டமாக 162 மருத்துவ மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.
