நீர்கொழும்பில் நடைபெற்ற 42 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்துள்ளார்.
செல்வம், அதிகாரம் அல்லது மதத்தின் அடிப்படையில் சட்டம் வேறுபடாது; நாட்டின் அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்து வருகிறது.
2006 ஆம் ஆண்டின் வழக்கிற்கு 2026 இல் தீர்ப்பு கிடைக்கும் அளவிற்கு நீதி வழங்கும் முறையில் பெரும் தாமதம் நிலவுகிறது. குற்றப் புலனாய்வுத் துறை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பை பலப்படுத்தி நீதித்துறை செயற்பாடுகள் விரைவுபடுத்தப்படும்.
பொதுமக்கள் அனைத்து முக்கிய அரசாங்கச் சேவைகளையும் வீட்டிலிருந்தபடியே இணையவழி (Online) மூலமாகப் பெற்றுக்கொள்ளும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்படும்.
எந்தவொரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்பாகவே அதைப் பற்றி முழுமையாக ஆராய்வோம்; மக்களுக்காக எடுக்கப்பட்ட தீர்மானங்களில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை. அதேவேளை தவறுகள் இருந்தால் மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து அதைத் திருத்தத் தயங்க மாட்டோம்.
வரவிருக்கும் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு நல்லதொரு சமூகம் கட்டியெழுப்பப்படும்.
