மூன்று தசாப்தங்களுக்கு பிறகு மீண்டும் ஹெல்பொட கிளன்லொச் மண்ணிற்கு பெருமை….!
இம்முறை வெளிவந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி கொத்மலை வலய கல்விப்பணிமனைக்கு உட்பட்ட மமா/கொத்/கிளன்லொச் தமிழ் வித்தியாலயம், கட்டுக்கித்துலையில் முப்பது வருடங்களின் பின் இரண்டு மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனையை நிலைநாட்டி பாடசாலைக்கும், பெற்றோருக்கும், ஹெல்பொட கிளன்லொச் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்பரீட்சையில் செல்வி பிரதீபன் லிசாலினி 136 புள்ளிகளையும்,
செல்வன் கந்தசாமி டிக்சான் 134 புள்ளிகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
30 வருட கால இடைவெளிக்குப் பிறகு கிடைத்த இந்த மகத்தான வெற்றியானது, பாடசாலையின் அதிபர் திரு.கந்தையா வாசுதேவன், மாணவர்களுக்குக் கற்பித்த வகுப்பாசிரியை திருமதி A. அனுசியா,
ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கிளன்லொச் சமூகம், அனைவருக்குமே அளப்பரிய பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் இந்த சாதனைக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை அடைவதற்கு உரிய காலத்தில் வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் உதவிகளையும் வழங்கிய கொத்மலை கல்வி வலயப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், வளவாளர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் அனைவருக்கும் கிளன்லொச் தமிழ் வித்தியாலய சமூகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
டாக்டர். கலாம் நற்பணி மன்றம்


