அமரர்.வீரய்யா சதாசிவம் (குருஜி லோகேஸ்வர்) 1945-2023
பதுளை தெமோதரையை பிறப்பிடமாகவும் கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு,வீரய்யா சதாசிவம் அவர்கள் 4.7.2023 சிவனடி சேர்ந்தார்.
இவர் பதுளையிலும் கொழும்பிலும் வாழ்த காலங்களில் பல மலையக சமூகம் சார்ந்த பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதிலும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதிலும் தீவிரமாக இயங்கினார்.
குறிப்பாக பதுளை, ஹாலி-எல நகரில் தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஏற்பட்ட பல்வேறு இடையூறுகளை களைவதில் அம்முயற்சியில் ஈடுபட்ட குழுவினருடன் இணைந்து பங்கெடுத்துக் கொண்டார்.
1983 இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்டு கொழும்பு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணியர் கோவிலில் அகதியாக தங்கியிருந்த போது, அங்கிருந்த சுகாதார குழுவினருடன் இணைந்து பணியாற்றினார்.
1990 ஆம் ஆண்டுகளில் கவிஞர் ஈழகணேஸ் அவர்களுடன் இணைந்து கொழும்பில் மலையக மக்களின் தனித்துவமான பிரச்சினைகளை இந்திய அரசிடம் முன்வைப்பதன் மூலம் தீர்வைப் பெறுவதற்கான அமைப்பொன்றையும் உருவாக்கி செயற்பட்டுருந்தார்.
சிறந்த ஆங்கில புலமை உடையவர்.சில காலம் தினகரன் வார மஞ்சரியில் சோதிடப் பகுதியையும் எழுதி வந்துள்ளதுடன்,சோதிடம் தொடர்பான நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தில் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி
