எங்கே எங்கள் நிலம்
***********************
ஆண்டக்கத மாண்டக்கத
ஆதியிலே வந்த கத
ஆண்டவனே எங்க கத
அந்தியிலே செத்தக்கத….
தொலைதூர காட்டயெல்லாம்
தூறுவாரி விட்டமக்க
அரைவாசி இடத்துக்கின்று
லாயக்கத்து போனமக்க….
கரையானுக்கும் பூரானுக்கும்
சொந்தமான வீடிருக்கு
கல்லு பொந்தில் குடியிருக்கும்
நாகத்துக்கும் வீடிருக்கு….
எறநூறு ஆண்டுகளாய்
இருந்த நெலம் சொந்தமில்ல
ஆதிக்க சிந்தனைக்கும்
எள்ளளவு கொறச்சலில்ல….
நூறாண்டு தாண்டிவிட்டும்
மாறாம போயிருக்கு
நாறிப்போன இந்தகத
நாள்தோரும் தானிருக்கு….
தலைவருக்கு கொறைச்சலில்ல ….
கூப்பாட்டுக்கு கொறச்சலில்ல …
தொண்டருக்கு கொறச்சலில்ல….
கொறைகளுக்கு கொறச்சலில்ல….
வேளப்பாக்க மட்டும் தானா
வேர்வை சிந்தும் எங்க சனம்
வேளை முடிஞ்சதன்னா
வெட்டப்பய நாங்கதானோ
“எங்கேடா எங்க நெலம் …”
கேக்கும் காலம் வந்திரனும்….
சங்க கடிச்சி தின்னும்
காலம் ஒன்னு வந்திடனும்…..
நாங்க உப்பு தண்ணி தந்தவிங்க
நன்றி கெட்ட எச்ச நீங்க
எள்ளுக்கூட பொறி எறயாதுடா
எங்க வவுறெறிஞ்சா….
“எங்கேடா எங்க நெலம் ”
(என் நெஞ்சம் கொண்ட ஈரம்)
எம்.ராமதாஸ்
இறம்பொடை
