ஹட்டன் வில்பிரட்புரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சோபக்கிருது வருட ஆடிமாத பௌர்ணமி விரதம் நாளை 1/8/2023 செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.
பகல் 11.00 மணிக்கு அறநெறி பாடசாலை மாணவ, மாணவிகளின் தேவார, பஜனையைத் தொடர்ந்து 11.30 மணிக்கு விசேட பூஜை, மகேஸ்வர பூஜையும் நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும். ஆலயத்தில் பொதுமக்கள் உபயமாக அன்னதானம் வழங்கப்படும்.
நாளையதினம் 3வது ஆடிச்செவ்வாய் விரதமும் கூடிய சுபநாளாகும். அன்று மாலை 2.30 மணிக்கு உபயகார் சங்கல்ப்பம் நடைபெற்று, 3.00மணிக்கு திரவிய அபிஷேகம் நடைபெற்று 3.30 மணிக்கு பூஜையுடன், திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாளைய தினம் அனைத்துப் பூஜைகளும் குறித்த நேரத்தில் நடைபெறுவதால்
அனைத்து அம்பிகை அடியார்களும் இந்த பூஜைகளில் கலந்துகொண்டு அம்பிகையின் அருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

