அஸ்வெசும கொடுப்பனவை 03 வருடங்களுக்குள் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில் ஊடாக பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, சமுர்த்தி பிளஸ் திட்டத்தின் கீழ் , அந்த மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் ,இந்த விடயம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.