இரத்தினபுரி கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை கஹவத்தை பனாவென்ன பிரதேசத்தில் இருக்கின்ற ஆற்றில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பெல்மடுள்ளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சடலம் குறித்து மேலதிக விசாரணைகளை கஹவத்தை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்