யாழ்ப்பாணம், தாவடி வன்னிய சிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (16) அதிகாலை பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், குறித்த வீடு சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த ஐவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் உள்ள யுவதியை காதலித்துள்ளார்.
யுவதியின் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்த்த நிலையில் குறித்த இளைஞன் தனது குழுவினருடன் வந்து இன்று அதிகாலை வீட்டின் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.