Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

May 15, 2026

உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

May 15, 2026

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

May 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மினுவாங்கொடையில் 08 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சஹீதா பவுண்டேஷன் 100 இலட்சம் ரூபா நிதி உதவி…
இலங்கை

மினுவாங்கொடையில் 08 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு சஹீதா பவுண்டேஷன் 100 இலட்சம் ரூபா நிதி உதவி…

ThanaBy ThanaSeptember 21, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கம்பஹா, மினுவாங்கொடை கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நௌபர் பௌசிக்கு சொந்தமான சஹீதா பவுண்டேஷன் முன்வந்துள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை கல்வி வலயத்தின் பிரிவில் உள்ள 8 பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு பவுண்டேஷன் 100 இலட்சம் ரூபாவை வழங்கியது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நேற்று (20) மினுவாங்கொடை கல்வி வலய அலுவலகத்தில் இடம்பெற்றது.

மினுவாங்கொடை நில்பனாகொட மகா வித்தியாலயம், ஹொரம்பெல்ல சீலவிமல மகா வித்தியாலயம், மினுவாங்கொடை கொரச ரணசிங்க மகா வித்தியாலயம், நதகமுவ கனிஷ்ட வித்தியாலயம், ஓபாத ஸ்ரீ குணானந்த ஆரம்பப் பாடசாலை, உடுகம்பல றோமன் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலை, உடுகம்பல ஆரம்பப் பாடசாலை மற்றும் மினுவான்கொடை அல் அமான் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இந்தத் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் கீழ் இப்பாடசாலைகளின் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.

இதேவேளை கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள 34 பாடசாலைகளை நவீன உலகிற்கு ஏற்றவாறு அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை நகர அபிவிருத்தி அதிகார சபை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் செயல்படுத்தியுள்ளது.  

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளின் கட்டிடங்கள் தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. இக்கட்டடங்களை முழுமையாக சீரமைக்க பாடசாலைகளிடம் பணம் இல்லாததால் அடிக்கடி சிறிய சிறிய சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் உரிய முறையில் ஆய்வு செய்து அந்த பாடசாலைகளின் அபிவிருத்திக்கான திட்டத்தை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்தார்.

இதன்படி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் பட்டய பொறியியலாளர்கள் மற்றும் கட்டிடக்கலை நிபுணர்கள் கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் சென்று தரவுகளை பெற்று இந்த அபிவிருத்தி திட்டத்தை தயாரித்துள்ளனர். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படும். மேல்மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் மாகாண ஆளுநர் விமானப் படையின் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவினால் இந்த அபிவிருத்தித் திட்டமும் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் நௌபர் பௌசி, மினுவாங்கொடை கல்விப் பணிப்பாளர் வஜிர ரணராஜ பெரேரா, மினுவாங்கொடை பிரிவு கல்விப் பணிப்பாளர் விஜித சோமசிறி மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முனீரா  அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி

    May 15, 2026

    களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு: புளத்சிங்கள உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

    May 15, 2026
    Editors Picks

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026

    அவிசாவளையில் 180 மி.மீ. கடும் மழை: ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் அவதானம்!

    May 15, 2026

    ஹட்டன் அரச பேருந்து நிலையம் முறையான பேருந்து சேவையை வழங்க வில்லை என பாடசாலை மாணவர்கள் புகார்

    May 15, 2026

    உடபுச்சல்லாவ அதிகாரவர்த்தை தோட்டத்தில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் -கண்டிக்கத்தக்கது ஐக்கிய தொழிலாளர் முன்னணி

    May 15, 2026

    மட்டக்களப்பில் பாடசாலை மாணவி கடத்தல் முயற்சி; இரு இளைஞர்கள் கைது!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.