தற்போது நிலவி வரும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கை-கால் வாய் நோய், டெங்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பல நோய்கள் இன்றைய காலத்தில் சிறுவர்களிடையே பரவி வருவதாகவும் இது தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் hand food mouth disease என்ற நோய் பரவி வருவதாகவும் அதனால் இருமல், சளி,காய்ச்சல் மற்றும் வாயை சுற்றி சிவப்பு புள்ளிகள் இருந்தால் அது hand food mouth disease எனவும் இது போன்ற அறிகுறிகள் இருக்கும் போது குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் சில நாற்களில் அது சரியாகிவிடும் எனவும் மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.
