Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தனியார் துறையின் அரிசி ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மரந்தகஹமுல அரிசி களஞ்சியசாலை
இலங்கை

தனியார் துறையின் அரிசி ஏகபோகத்தை முறியடிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்ட மரந்தகஹமுல அரிசி களஞ்சியசாலை

ThanaBy ThanaDecember 18, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சிறிய மற்றும் நடுத்தர அரிசி வியாபாரிகளுக்காக மரந்தகஹமுலவில் நிர்மாணிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக கைவிடப்பட்டிருந்த அரிசி மொத்த விற்பனை மத்திய நிலையம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நாளை (19) திறந்து வைக்கப்படவுள்ளது.

மரந்தகஹமுல நகரம் இந்நாட்டில் அரிசி மொத்த வியாபாரத்திற்குப் புகழ்பெற்ற நகரமாகும். அரிசி மொத்த விற்பனை நிலையமாக வர்த்தக சமூகத்தைக் கொண்ட நாட்டில் மரந்தகஹமுல மட்டுமே உள்ளது. 1977ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மரந்தகஹமுல நகரில் அரிசி வியாபாரிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தமது வியாபாரத்தை செய்து வருகின்றனர். ஆனால், அரிசி விற்பனை செய்வதற்கான வசதிகளுடன் கூடிய தனி இடம் இல்லாததாலும், அரிசி சேமித்து வைக்க இடமில்லாததாலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நாட்டில் தனியார் துறையின் நெல் ஏகபோகத்தை முறியடிக்கும் நோக்கில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் இந்தக் களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அது 2014ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திவினெகும திட்டத்தின் ஊடாகவே செயற்படுத்தப்பட்டது.

ஆனால் அது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இயங்கிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2015 இல் இல்லாதொழிக்கப்பட்டது. அதே நேரத்தில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, இந்த களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக மையம் காடு போல் வளர்ந்து காணப்பட்டது.

அதன்படி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் .பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலையீட்டின் பேரில், இந்தக் களஞ்சிய வளாகம் புனரமைக்கப்பட்டது. மரந்தகஹமுல களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையத்தின் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க திறைசேரியில் இருந்து பணம் கேட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த ஆண்டு அமைச்சரவை பத்திரத்தையும் சமர்ப்பித்திருந்தார்.

மரந்தகஹமுல களஞ்சிய வளாகம் மற்றும் மொத்த வர்த்தக நிலையம் அமைந்துள்ள காணி சுமார் இரண்டு ஏக்கர் அளவில் இருக்க வேண்டும். 115 அரிசி விற்பனை நிலையங்களைக் கொண்ட இதனை நிர்மாணிப்பதற்கு 459 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகிறார்.

இங்கு கட்டுமானப் பணிகள் முழுவதையும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் செய்துள்ளது. இந்தக் களஞ்சிய வளாகத்தில் சுமார் 75,000 மெட்ரிக் தொன் நெல்லை சேமித்து வைக்கும் வசதிகள் உள்ளன. நெல் வாரியத்தின் கீழ் உள்ள இரண்டு களஞ்சியசாலைகளும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த களஞ்சியசாலை அடுத்த பருவத்தில் இருந்து அரிசியை களஞ்சியப்படுத்துவதற்காக மேல் மாகாண கூட்டுறவு திணைக்களத்திற்கு வழங்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அதற்காக மேல்மாகாண ஆளுநர் உள்ளிட்ட உரிய தரப்பினருடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மரந்தகஹமுல விசேட மொத்த விற்பனை நிலையம் நாளை (19) பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதுடன் தினமும் காலை 5.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை திறந்திருக்கும். மொத்த வியாபாரிகள் அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் இங்கிருந்து பெறலாம். இந்த மத்திய நிலையத்தில் அவர்களுக்கு தேவையான வாகனம் நிறுத்தும் வசதிகள் மற்றும் பொதுவான வசதிகள் அனைத்தும் உள்ளன.

முனீரா அபூபக்கர்
2023.12.18

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.