Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் பௌதீக அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான திட்டம்..
இலங்கை

திறைசேரிக்கு சுமை ஏற்படாத வகையில் அடுத்த நான்கு ஆண்டுகளில் பௌதீக அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கான திட்டம்..

ThanaBy ThanaDecember 21, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அரச மறுஆய்வுக் குழுவால் மூடப்படுவதற்கு முன்மொழியப்பட்ட நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் நிறுவனத்தை நிறுவும் நோக்கத்துக்காக மட்டுமே வரையறுக்கப்பட்ட நிறுவனத்தைத் தொடர்ந்து இயக்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கும். பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட கூட்டு அமைச்சரவை பத்திரமாக அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தை மூடுவது அல்லது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மாற்றுவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணவியல் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொதுச் செலவுக் குழுவின் அறிக்கையின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை முன்னதாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

பணவியல்> பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டு அமைச்சரவை பத்திரத்துடன் தொடர்புடைய நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது தொடர்பான அவதானிப்புகளை சமர்ப்பித்து தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சட்டத்தினால் ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளில் இருந்து நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை விலக வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக குடியிருப்பு திட்டத்தில் ஒரு நாட்டின் பங்களிப்புக்காக தொடங்கப்பட வேண்டிய பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றச் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரே நிறுவனம் நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையாகும். நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின்  கீழ் செயல்படுகிறது.

நகர்ப்புறமாக அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி பகுதிகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், வீட்டுத் தீர்வுகளை வழங்குவதன் மூலம் பல திட்டங்களும் வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சிப் பிரிவுகளில்; 273 உள்ளூராட்சிப் பகுதிகள் நகரப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, நகர்ப்புற மக்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வு நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நகர்ப்புறங்களுக்கு ஏற்ப கையாளப்படுகின்றன. நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில்> அடுத்த நான்கு ஆண்டுகளில் திறைசேரிக்குச்; சுமை ஏற்படாத வகையில் பௌதீக அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கான திட்டங்களை நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை தயாரித்துள்ளது.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை: இரு கடைகளுக்கு 3 இலட்சம் ரூபா அபராதம்!

    August 10, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.