இலங்கை சதுரங்க சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2023 தேசிய மட்ட சதுரங்க போட்டி கடந்த 2023.04.6,7,8,9,ஆகிய நான்கு நாட்கள் பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இதில் இலங்கையிலுள்ள முன்னனி பாடசாலைகளுடன் தலவாக்கலை தேசிய பாடசாலை மாணவர்கள் போட்டியிட்டு மிகச்சிறப்பான திறமைகளை வெளிக்காட்டினர்.சதுரங்க போட்டியில் எங்களாலும் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற முடியும் என்பதை வெளிக்காட்டியுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும்,போட்டியில் பங்குபற்ற உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும்,பாடசாலை நிர்வாகத்திற்கும் பயிற்றுவித்த ஆசிரியர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.