மலர்ந்த புத்தாண்டை முன்னிட்டு மத இனக்கம் மற்றும் ஒற்றுமையை பிரதிபலிக்கும் முகமாக இன்று எட்டியாந்தோட்டை ஸ்ரீ நந்தா ராம பௌத்தவிகாரையில் சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தலைக்கு எண்ணெய் தேய்க்கும் வைபவம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதேசத்தில் இருக்கும் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டிருந்தனர் .அதே வேளை இஸ்லாம் , இந்து சமய மக்கள் பௌத்த விகாரையின் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டதோடு பௌத்த சமயத்தின் வரலாறை கேட்டு தெரிந்து கொண்டனர்.
மேலும் பௌத்த ,இஸ்லாம் இந்து சமய மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மரம் ஒன்றை நாட்டினார்கள். அதேநேரம் விகாரைக்கு வருகை தந்த அனைவரையும் அன்புடன் பௌத்த பிக்குமார் வரவேற்று அவர்களுக்கு விருந்து உபசாரங்களும் வழங்கினர் .