நாட்டுக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்த இந்திய மீனவக்குழுவொன்றின் கைது நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கசந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
கடற்படை வீரர் ஒருவரின் உயிரிழப்பு மற்றும் கடற்படையின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதற்காகவும், இந்திய மீனவர்கள் பத்து பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ‘பி’ அறிக்கை மூலம் யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.