ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து பீடத்தின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர், நாட்டின் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, கண்டி நகரத் திட்டத்தை மாநாயக்க தேரர்களிடம் கையளித்தார்.