தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) மதுபான விற்பனை நிலையம் ஒன்றை நேற்று (03) சோதனை செய்த போது கூரிய பொருளால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த அதிகாரி சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் மேலும் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஷாக்சினி