ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த சமிந்திர தயான் லெனாவ, இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன்னர் ஜனாதிபதியையோ அல்லது அவரது சட்ட பிரதிநிதிகளையோ கலந்தாலோசிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நிறுத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் என்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக இருப்பதாகவும், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுப்பது சரியானதே எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஷாக்சினி