நிவித்திகல, வட்டபொத்த, யொவுன் கிராமத்தில் இறப்பர் தோட்டத்திற்கு அருகில் உள்ள நடைபாதையில் முகத்தில் இரத்தக் காயங்களுடன் 16 வயதுடைய சிறுமியின் சடலம் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நிவித்திகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் வட்டபொத்த கோவிலுக்கு அருகில் கடை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தன்று சிறுமி பள்ளிக்கு செல்லாததால் வீட்டில் தனியாக இருந்ததாகவும், ஆகவே அந்த சிறுமியை கடைக்கு வருமாறு கூறி தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும் அப்போது, சிறுமி வருவதில் தாமதம் ஏற்பட்டதால், கடையில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த தாய், இறப்பர் தோட்டத்தின் நடுவே உள்ள நடைபாதையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சிறுமியின் சடலத்தை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறப்பர் மரத்தின் கிளையொன்று முறிந்து சிறுமியின் மீது விழுந்ததால் இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஷாக்சினி
