இலங்கையின் இடதுசாரி இயக்கத்தில் ட்ரொட்சிச நிலைப்பாட்டில் இருந்து வந்த சமசமாஜ இயக்கத் தில் இணைந்து அதன் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டு வந்த தோழர் விக்கிரமபாகு தனது 81வது வயதில் இயற்கை எய்தினார்.
தோழர் பாகு தனது இறுதிக் காலம் வரை அதன் வழித்தட த்தில் புரட்சிகர நிலைப் பாட்டுடன் செயலாற்றியும் வந்தவர். இலங்கையின் தொழிலாலாளி வர்க்கத் திற்காகப் போராடி வந்த தோழர் விக்கிரமபாகு ஆளும் வர்க்கம் முன்னெ டுத்து வந்த தேசிய இனங்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரின வாத ஆட்சியினருக்கு எதிரான போராட்டத்தில் எப்பொழுதும் முன்னணி யில் இருந்து வந்தவர்.
போர் உச்ச நிலையில் இருந்த தொண்ணூறு களின் நடுப் பகுதியில் எமது கட்சி,நவசமசமாஜக் கட்சி உட்பட ஆறு இடது சாரிக் கட்சிகள் இணை ந்து புதிய இடதுசாரி முன்னணியைத் தோற்று வித்துச் செயல்படுவதில் தோழர் விக்கிரமபாகு முன்னின்றவர்.
தேசிய இனப் பிரச்சினை காரணமாக இடம்பெற்று வந்த கொடிய போரை உடன் நிறுத்தி சுயநிர் ணய உரிமை அடிப்படை யில் அரசியல் தீர்வு காணப்படுவதைப் புதிய இடதுசாரி முன்னணி பிரதான கோரிக்கையாக முன்வைத்து சிங்கள மக்கள் மத்தியில் கூட்டங்கள், பேரணிகள், கருத்தரங்குகள்,சத்தியாக் கிரகம் போன்றவற்றை முன்னெடுப்பதில் தோழர் விக்கிரமபாகு வகித்த முன்னணிப் பாத்திரம் தோழமையுடன் நினைவு கூரத்தக்கதாகும். இலங் கையின் ட்ரொட்சிசவாத இயக்கங்களிடம் பொது வாகவே இருந்து வந்த அரசியல் பலவீனம் தோழர் பாகுவிடமும் இருந்து வந்த போதிலும் அவரது நிலைப்பாடு இலங்கையின் ஒடுக்கப்டும் சிங்கள, தமிழ், முஸ்லீம், மலைய கத் தமிழ் உழைக்கும் மக்க ளின் பக்கமே இருந்து வந் தது. அத்தகைய தோழர் விக்கிரமபாகு அவர்களின் மறைவு ஆழ்ந்த கவலை தருவதாகும்.
தோழர் விக்கிரமபாகுவிற்கு எமது கட்சியின் செவ் அஞ்சலி யைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவர் தலைமை தாங்கி வந்த நவசமசமா ஜக் கட்சிக்கும் அவரது குடும்பத்தினருக் கும் எமது அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
