நமுனுகுலை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதுடைய பதுல வத்த நமுனுகுலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள மரம் ஒன்றை வெட்டிய போது மரம் குறித்த நபரின் மேல் விழுந்துள்ளமையினால் படுகாயம் அடைந்த நபர் பல்லகெடுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நமுனுகுலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் தற்போது பல்லகெடுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நமுனுகுலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
