நுவரெலியா புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தின் 176 வது வருடாந்த திருவிழா ஆலயத்தின் பங்குதந்தை அருட்தந்தை கெமிலஸ் அவர்களின் வழிகாட்டளில் இன்று காலை இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குறிய கலாநிதி என்டன் வயமன் குருஸ் அடிகளாரின் தலைமையில் திருவிழா திருப்பளி ஒப்புகொடுக்கப்பட்டது.
இதன்போது ஆயிரகணக்கான விசுவாசிகள் பங்குபற்றியிருந்ததுடன். திருவிழா திருப்பளியின் பின்னர் புனித சவேரியாரின் சுரூபம் நுவரெலியா நகர் முலுதும் எடுத்துச்செல்லப்பட்டது. விசேட அம்சமாக புனித சவேரியாரின் உடல் வைக்கப்பட்டுள்ள இந்தியாவின் கோவா நகரிலுல்ல ஆலயத்திலிருந்து கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட புனித சவேரியாரின்அலியா உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் ஒரு சிறு பாகம் மற்றும் அவரின் அந்த பெட்டியில் காணப்படும் ஒரு துண்டு துணி என்பனவும். சுரூபத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டது.
இதன்போது அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் பங்கு மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
