.
வெலிஙபொல ரங்வல பிரதேசத்தில் தந்தை வெட்டிய மரத்தின் கிளை ஒன்று மகன் மீது விழுந்ததில் மகன் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் வெலிஙபொல வித்தியாலய மாணவன் என தெரிய வந்துள்ளது.
வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றை தந்தையும் இன்னொரு நபரும் சேர்ந்து வெட்டும் போது இந்த சம்பவம்(11) இடம்பெற்றுள்ளது.
பாரிய காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மாணவன் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை வெலிஙபொல காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
