தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் சடலம் ஒன்று ஒதுங்கி இருப்பதை அவதானித்த பிரதேச மக்கள் நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பிரிவு மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பாதுகாப்பு தரப்பினர் சடலத்தை கரை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் ஒரு பெண்ணுடையது என அடையாளம் காணப்பட்டுள்ள அதே வேலை சடலம் தொடர்பான வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர் . சம்பவம் தொடர்பாக தலவாக்கலை போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் . சடலைமானது மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தின் நீர் வெளியேறும் வாயிற்கதவுக்கு அருகாமையில் குப்பைகளுடன் ஒதுங்கி இருந்ததையே பிரதேச மக்கள் அவதானித்தமை குறிப்பிடத்தக்கது தற்பொலுது சடலம் நீதவான் விசாரணையின் பி்ன்னர் நுவரெலியா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன
