மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் மின் கம்பத்தில் மின் குமிழிகள் ஒளிராத காரணமாக மக்கள் அவதி.
மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு செல்லும் பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் குமிழ்கள் ஒளிராத காரணமாக இரவு நேரத்தில் வைத்திய சாலைக்கு செல்லும் நோயாளிகள், பணி புரியும் சிற்றூழியர்கள் ,தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
வைத்திய சாலைக்கு அண்மித்துள்ள பகுதியில் பாரிய அளவில் பற்றைக் காடாக காணப்படுவதனால்
இரவு நேரங்களில் பன்றிகள் மற்றும் சிறுத்தை பீதியுடன் வைத்திய சாலைக்கு செல்ல வேண்டியுள்ளது என வைத்திய சாலையில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இவ் வைத்தியசாலை ஆரம்பிக்க பட்ட காலத்தில் வைத்திய சாலை வட்டாரத்தில் உள்ள சகல மின் கம்பத்திலும் மின் குமிழிகள் பொருத்தப்பட்டு இருந்தன எனினும் அவை தற்போது இல்லை என மக்கள் விசனம் தெரிவிக்கன்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
