சபரகமுவ மாகாணத்தில் தமிழ் மொழி மூல பட்டதாரிகள் ஆசிரிய நியமனத்தின் போது புறக்கணிப்பு.
மீண்டும் இனரீதியான அரசியல் துணைபோகும் தமிழ் முஸ்லிம் எம்பிக்கள்.
வெறுமனே 1114 இல் 60 பட்டதாரிகள் மாத்திமே சபரகமு தமிழ் மொழி பட்டதாரிகள்.
திங்கள் 23 ஆம் திகதி 2024 அன்று சபரகமுவ மாகாணத்தில் மூன்றாம் கட்டமாக 154 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இதன் போது கணிதம், விஞ்ஞானம், IT, ஆங்கிலம், ஆரம்ப பிரிவு என வழங்கப்பட்டது. இதன் போது தமிழ் பிரதநிதித்துவ பிரதி அமைச்சர் சுந்தர்லிங்கம் பிரதீப் அசர்களும் கலந்துகொண்டனர்.
இதன் போது தமிழ் மொழி பட்டதாரிகள் ஒருவர் கூட நியமனம் வழங்க வில்லை. சபரகமுவ மாகாணத்தில் தற்போது 300 மேற்பட்ட தமிழ், முஸ்லிம் பட்டதாரிகள் உள்ளனர் அதே போல் சபரகமுவ பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பாடசாலைகளில் அதிக வெற்றிடம் காணப்படுகிறது. சபரகமு பிரதேசத்தில் உள்ள பட்டதாரிகளில் 150 மேற்பட்ட பட்டதாரிகள் மலையக தோட்டத்தொழில் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகள்.
முன்னைய அரசினால் ஒவ்வொரு மாகாணத்துக்கும் கோட்டக்கள் வழங்கி அந்த அந்த மாகாண பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை மாகாண பிரதான செயலாளர் மற்றும் மாகாண கல்விச் செய்லாளர்களுக்கும் ஒப்படைக்கப்பட்டது. சபரகமுவ மாகாணத்தில் 1200 க்கு உட்பட்ட கோட்ட கிடைத்தது. இதன் போது தமிழ் மொழி வெற்றிடங்களுக்கு 328 கோட்ட ஒதுக்கி இருந்தது. இதன் போது சிங்கள மொழி மாணவர்களுக்கு சபரகமுவ மாகாணத்திலும் தமிழ் மொழி மூலம் அகில இலஙகையில் உள்ள அனைவருக்கும் விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
வழமையாக தமிழ் மொழி சபரகமுவ பட்டதாரிகள் குறைவாக உள்ளதால் அவர்களை நேர்முக பரீட்சைக்கு அழைத்து அடிப்படை தகமைகளை அவதானித்து நியமனம் வழங்கினார்கள். இம்முறை முரணாக சில பாடங்களுக்கு பரீட்சையும் சில பாடங்களுக்கு நேர்முக தேர்விலும் தெரிவு செய்தார்கள்.
இதன் போது தமிழ் மொழியில் 206 நியமனங்கள வழங்கப்பட்டது அதில் சபரகமு பட்டதாரிகள் 60 மாத்திரமே உள்வாங்கப்பட்டார்கள்.
இதில் பாரபட்சம் மற்று இனரீதியிலும், சில அதிகாரிகளின் துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பரீட்சையை வழமைக்கு மாறாக பரீட்சை திணைக்களம் நடாத்தாமல் கொமிஷன் சபையினால் நடாத்தப்பட்டது.
வினா தாள் தனி ஒரு நபரால் தயாரிக்கப்பட்டு அவரே திருத்தம் செய்து தேவையான மாதிரி புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தமிழ் மொழி அதிகாரிகலுக்கு சிங்கள் மொழி வினாத்தாளை மொழி பெயர்ப்பு செய்ய வழங்காது குகூல் இல் மொழி பெயர்ப்பு செய்துள்ளார்கள். நேர் முக தேர்விலும் சபரகமுவ மாகாண பட்டதாரிகளை புறக்கணித்துள்ளார்கள்.
இந்த குளருபடியில் அதிகாரிகளிம் தலையீடும் அரசியல் தலையீடும் உள்ளதாக தகவல். மொத்தமாக 1114 யில் 206 தமிழ் மொழி பட்டதாரி அதில் 60 சபரகமுவ பட்டதாரிகள்.
நாம் புதிய அரசாங்கம் வரமுன் பிரதி அமைச்சர் பிரதீப், உட்பட அனைவரையும் சந்தித்தோம். தற்போது நாம் ஆளுநரை பல தடவைகள் சந்தித்தோம் தீர்வு இன்னும் எட்டவில்லை. இனரீதியிலும் அரசயிலிலும் அநாதைகளாக இருக்கிறோம்.
சபரகமுவ தமிழ் மொழி பட்டதாரிகள் சங்கம்
