பார ஊர்தி குடை சாய்ந்ததில் ஜவர் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று காலை 11.35 நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் புரவுன்லோ தோட்ட முத்துமாரியம்மன் ஆலய பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் ,பார ஊர்தி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து உள்ளது.
ராகலை பகுதியில் இருந்து சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்துவிட்டு திரும்பும் போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சிறிய ரக பார ஊர்தியில் பயணித்த மூன்று சிறார்கள் மற்றும் பெண் ஒருவர் ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மஸ்கெலியா விசேட நிருபர்.
