பசறை நிருபர். 11.01.2025
நாட்டின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக அடைமழை பெய்து வருகின்றது.
இடைவிடாது பெய்து வரும் அடைமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள வீதியோர கடைகளின் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அடைமழையோடு பனிமூட்டமான வானிலை நிலவி வருகிறது. பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான குளிர் நிலவுகிறது. இதன்காரணமாக நோயாளர்களும், முதியோரும் , சிறுவர்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பதுளை மாவட்டத்தில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில் தொடரும் மழையினால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளன.
