உலக அயலகத் தமிழர் தினம் 2025 இன்றும், நாளையும் இந்தியா தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இடம்பெறவுள்ளது.
இதன் முதல் நாள் நிகவுழ்களை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இரு நாள் உத்தியோகபூர்வமாக விஜயத்தினை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும், கடற்றொழில் நீரியல் வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்களும் தமிழக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அழைப்பின் பேரில் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகவும் பிரதி அமைச்சரின் ஆலோசகரும் பிரத்தியேக செயலாளருமான கலாநிதி பி .பி சிவப்பிரகாசம் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்க விடயமாகும்.

