மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் மழை பெய்தது வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் விவ சா சிகளின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.
அதவேளை வியாபார நிலையங்களில் தை திருநாள் வியாபாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் மலையகத்தில் கடுமையான குளிரானா காலநிலை தோன்றியுள்ளது.ஏ 7 வீதி நோட்டன் மஸ்கெலியா வீதி, மஸ்கெலியா ஹட்டன் வீதியில் அதிக அளவில் பணி மூட்டம் காணப் படுகிறது, இதனால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டு கொள்கின்றனர்.
சிவனடிபாத மலை பருவகாலம் ஆரம்பிக்கபட்ட நிலையில் இந்த விடுமுறை காலத்தில் அதிக அளவில் உள்நாட்டு வெளிநாட்டு, யாத்திரிகர்கள் அதிக அளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அதேநேரத்தில் சிவனடிபாத மலைக்கு செல்லும் படிக்கட்டுகளில் நீர் வழிந்தோடுவதால் யாத்திரிகர்கள் மிகவும் அவதானமாக செல்ல வேண்டும் என பொலிசார் தெரிவித்து வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள்
