இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மலையகத்திற்கான உப குழு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடியது.
குறித்த கூட்டம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தை .தனராஜ் தலைமையில் இடம்பெற்றதுடன், மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சட்டத்தரணி கபிலன் வில்லவராஜன் உட்பட குழுவின் ஏனைய அங்கத்தவர்களும் கலந்துக்கொண்டனர்.
மலையகத்தில் நிலவுகின்ற பல்வேறு பட்ட மனித உரிமைகள் சார் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டத்தோடு ,நீண்ட கால தீர்வுகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் எவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள முடியும் தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
