வெட்டகோலு வேவா பகுதியில் ஒரு புள்ளி மான் கொல்லப்பட்டது தொடர்பாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான செய்திகளில் செய்தி வெளியான பிறகு பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை நேற்று (26)கைது செய்த நிலையில் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் ஓகஸ்ட் 1, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
சட்டம் அனைத்து தனிநபர்களுக்கும், அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சமமாகப் பொருந்தும் என்றும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நம்பகமான தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பொலிஸ் திணைக்களம் இதன்போது வலியுறுத்தியது.
