மலையக தமிழ் மக்களின் உரிமைகள் குறித்த தேசிய கலந்தாய்வு ஒன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டது.
மலையகத் தமிழ் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது குறித்த தேசிய கலந்தாய்வு ஒன்றை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் எல்.டி.பி. தெஹிதெனிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விசேட மாநாடு , 17 /06/2026 அன்று கொழும்பு 03 றில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் காலை 9.30மணி தொடக்கம் 01 மணிவரை இடம்பெற்றது.
நிகழ்வில் அண்மையில் இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்கண்டறியும் களவிஜயங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து கலந்துரையாடியதோடு குறிப்பாக, மலையக சமூகத்தினர் எதிர்நோக்கும் பின்வரும் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்படவுள்ளது:
காணி மற்றும் வீட்டு உரிமைகள்
தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணிச்சூழல் (வெளிவாரி உற்பத்தியாளர் மாதிரி – Out-grower model உட்பட)
அரச சேவைகளை அணுகுவதில் உள்ள சவால்கள்
சுகாதாரம் மற்றும் கல்வி
சமூக-பொருளாதார நல்வாழ்வு
இவற்றுடன், மலையகத் தமிழ் சமூகம் தொடர்ந்து எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு கொள்கை ரீதியான தீர்வுகளை எட்டும் நோக்கில் இந்த ஆலோசனைக் கூட்டம் இடம்பெற்றது.
நிகழ்வில் மனித இலங்கை மணித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் ,முக்கிய அதிகாரிகள் ,மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தி செயற்படும் மலையக தமிழர் உப குழுவின் உறுப்பினர்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள் ,சட்டத்தரணிகள் ,அரச சார்பற்ற நிறுவனங்களை பிரதிநித்துவப்படுத்திய முக்கிய அதிகாரிகள் அரசியல் ,தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவிலயாளர்கள் என பலரும் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்நதுகொண்டனர்.நிகழ்வை மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளரும் (சர்வதேச விவகாரங்கள்) சட்டத்தரணியுமான கபிலன் வில்வராஜன் ஒழுங்கு செய்திருந்தார்.