தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் ஊழியர் சேமலாப நிதிய (EPF) சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தொழில் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குறித்த இரு நாட்களிலும் தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், அனைத்து வலய, மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களில் இயங்கும்:
ஊழியர் சேமலாப நிதிய (EPF) தரவுக் கட்டமைப்பு,டிஜிட்டல் EPF கட்டமைப்பு
ஆகியவற்றுடன் தொடர்புடைய அனைத்துப் பொது மக்கள் சேவைகளும் முன்னெடுக்கப்படமாட்டாது. இதற்கமைய, கொடுப்பனவுகளை வழங்குதல் மற்றும் புதிய பதிவுகளை மேற்கொள்வது உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.
நேர ஒதுக்கீடு செய்தவர்களுக்கான மாற்று ஏற்பாடு
குறித்த இரண்டு நாட்களிலும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஏற்கனவே முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கியுள்ள (Appoinments) வாடிக்கையாளர்கள், எதிர்வரும் ஒரு மாத காலப்பகுதிக்குள் தமக்குச் சௌகரியமான எந்தவொரு அலுவலக நாளிலும் உரிய தொழில் அலுவலகத்திற்குச் சென்று சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்படும் அဆௌகரியங்களுக்கு தொழில் திணைக்களம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது.
