செ.திவாகரன்,
நுவரெலியாவில் ஊழல் ஒழிப்புக்காக அரச அதிகாரிகளின் விழிப்புணர்வு நடைபவனி .
அரசாங்கத்தின் ‘கிளீன் சிறிலங்கா தேசிய திட்டத்தின் கீழ் “தேசிய நேர்மை வாரம் ” ஆரம்பத்தை முன்னிட்டு நுவரெலியா மாவட்டச் செயலாளர் திருமதி துஷாரி தென்னகோன் அவர்களின் தலைமையில் (28) இன்று விழிப்புணர்வு நடைபவனி
நுவரெலியா பிரதான நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.
ஊழலற்ற மற்றும் முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது மேலும்
தனிப்பட்ட இலாபங்களை விடப் பொது நலனுக்கு முன்னுரிமை அளித்து, சுய ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளுடன் சேவையாற்றும் அரச அதிகாரிகளை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
நுவரெலியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் தொடங்கிய விழிப்புணர்வு நடைபவனி நுவரெலியா பிரதான வழியாக பதுளை வீதியூடாக நுவரெலியா சினிசிட்டா நகர மண்டபத்தை நோக்கிச் சென்றது இப்பேரவையில் முப்படையினர் அடங்கறளாக சுமார் 500 அரச அதிகாரிகள் பங்கேற்றனர் தொடர்ந்து அங்கு ஒரு விழா நடைபெற்றது.
