வவுனியா, தரணிக்குளம் பகுதியில் 11 வயது சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக்கொடூரச் செயல் இடம்பெற்றுள்ளது.
தாயினால் கைவிடப்பட்டு, தந்தையின் பராமரிப்பின் கீழ் வாழ்ந்த 11 வயது சிறுமி 36 வயது நிரம்பிய நபரால் இவ்வாறு துஸ்பிரயோகதிற்கு உள்ளானார்.
வவுனியா பொலிஸாரினால் 2016 ஆம் ஆண்டு வவுனியா நீதிவான் நீதிமன்றில் பீ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தற்போது மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக நீதித்துறையால் வழங்கப்பட்டுள்ள இவ்வாறான கடுமையான தண்டனைகள் சமூகத்தில் ஒரு வலுவான எச்சரிக்கையாக அமைகின்றன.
#Vavuniya #CourtNews #ChildAbuse #SriLankaNews #Justice #VavuniyaHighCourt
