பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அடுத்தமாதம் 02திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பசறை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவரை பார்வையிட பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த இளைஞர்
ஒருவர் தாக்குதல் நடத்தி உள்ளார்.
கைதிக்கு கையடக்க தொலைபேசி கொடுக்க முயன்ற போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கையடக்க தொலைபேசி கைதிக்கு கொடுக்க முடியாது என தெரிவித்த போது ஆத்திரம் அடைந்த இளைஞன் பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்
குறித்த இளைஞன் பசறை மீரியபெத்த பகுதியை சேர்ந்த 23வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்
இளைஞன் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது எதிர்வரும் 02திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
