இன்று மாலை 5.55 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்திற்கு முன்னால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் ரயில்வே காவல் துறையினரால் பிடித்து பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளார்.
குறித்த நபர் பதுளை கனுபெலல பகுதியை சேர்ந்த 40 வயதுடைய நபர் எனவும் இவர் தற்போது புத்தல இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகிறது
குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் போது மது போதையில் இருந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ராமு தனராஜா
