சமாதானமும் சமூகபணியும் (PCA) நிறுவனத்தின் அனுசரனையில்
திட்ட உத்தியோத்தர் திரு.ரோகிணி அவர்களின் வழிகாட்டலில் திரு.S. தேவராஜன் திருக்கோவில் பிரதேச நல்லிணக்க குழு இணைப்பாளர் அவர்களின் தலைமையில், இன நல்லிணக்கம் மற்றும் இனங்களின் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்ளும் முக மாக திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேச நல்லிணக்க குழு மற்றும் இறக்காம நல்லிணக்க குழூவினரும் இணைந்து நடாத்திய கலாச்சார நிகழ்வுடன் கூடிய கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேச கலாச்சார மத்திய நிலைய கட்டத்தில் pca நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது.
நிகழ்வில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் கலாச்சாரத்தையும் வெளிப்படுத்த கூடிய நிகழ்வுகளும் உரைகளும் நிகழ்த்தப்பட்டதுடன் மதத்தலைவர்களின் ஆசீ உரையும் இடம்பெற்றது.
மேலும் இவ் நிகழ்வானது இன அக்கியத்தினை சமுக இன கலாச்சார வேறுபாடுகளுக்கு அப்பால் உருவாக்கும் செயற்த்திட்டத்தின் மூலம் ஒருவருடகாலாக இயங்கி கொண்டு வரும் திருக்கோவில் பிரதேச இன நல்லிணக்க குழூ உறுப்பினர்களின் சமுக முன் மாதிரி ஏற்பாடாக இன்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் சிறப்பு அதிதியாக திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் க.சதிசேகரன் சமாதானமும் சமுகப்பணியும் (PCA)நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் திரு. நமச்சிவாயம் பாஸ்கர் மற்றும் சாகாம விசேட அதிரடி படை முகாம் பொறுப்பதிகாரி திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோத்தர் மற்றும் திருக்கோவில் காஞ்சிரன் குடா இராணுவ முகாம் கட்டளை அதிகாரி
இன நல்லிக்க குழுக்களின் உறுப்பினர்கள் மதத்தலைவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்









