தலவாக்கலை நகரில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை நகரில் இயங்கிவரும் உணவகம் ஒன்றின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின் மோதலாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஐவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் 10.09.2023 இரவு 8.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நகரில் பணிபுரியும் கூலி வேலை தொழிலாளிகள் நால்வர் ஹோட்டல் ஒன்றில் மூன்று சிகரெட்டுக்கள் பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் பெற்றுக்கொண்ட சிகரெட்டுக்களுக்கு இவர்கள் பணம் வழங்கவில்லை என ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் மூன்று சிகரெட்டுகளுக்கு பணம் வழங்கியதாக சிகரெட்டை பெற்று கொண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஹோட்டல் உரிமையாளருக்கும், தொழிலாளர்களுக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் இது சண்டையாக மாறியுல்லது
இந்த தாக்குதலிள் ஹோட்டல் உரிமையாளர்றும் அவருடைய மகனும், ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளிகளுடன் ஐவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் 01 வர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கௌசல்யா.
