மத்திய மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, நல்லதண்ணிய சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையின் எஹெல கனுவ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலை தடைபட்டுள்ளது.
நிலைமை குறித்து விசாரணை மேற்கொண்டபோது பேசிய ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, இப்பகுதிகளில் நிலவும் மழை காரணமாக, நல்லதண்ணிய சிவனடி பாத மலைக்கு செல்லும் சாலையின் எஹெல கனுவ பகுதிக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவின் ஒரு பகுதி சாலையின் மீது சரிந்து விழுந்து, சாலையைத் தடை செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சாலையின் மீது சரிந்து விழுந்த மண்ணை அகற்றி, சாலையை அதன் பழைய நிலைக்கு மீட்டெடுப்பதற்காக, அப்பகுதிக்கு ஒரு குழு அதிகாரிகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதீப் வீரசேகர கூறினார்.
மஸ்கெலியா நிருபர்.
