Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

August 8, 2026

குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

August 8, 2026

அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

August 8, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க ஜனாதிபதியிடம் 13 அவசர யோசனைகள்..
இலங்கை

நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை போக்க ஜனாதிபதியிடம் 13 அவசர யோசனைகள்..

ThanaBy ThanaSeptember 19, 2023No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

நிர்மாணத்துறையில் ஏறட்டுள்ள பின்னடைவை தவதற்கு  தேவையான 13 அவசர யோசனைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த தெரிவித்தார்.  இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின்படி, நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான கொள்கைகள் அமைச்சின் செயலாளரினால் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பட்ஜெட்டில் கட்டுமானத் தொழிலை மேம்படுத்த தேவையான கொள்கைகள் அறிமுகப்படுத்தபடும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டின் மக்கள் தொகையில் 20% பேர் கட்டுமானத் தொழிலை நம்பி உள்ளனர். எப்படியாவது நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்தால், நாட்டின் மொத்த சனத்தொகையில் 1/5 பேரின் வாழ்க்கை முடக்கப்படும் என அமைச்சின் செயலாளர் வலியுறுத்துகின்றார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்களின் கட்டுமான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான களுத்துறை மாவட்ட ஆலோசனை சேவைகள் நடமாடும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொண்ட போதே அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி களுத்துறை தொடங்கொட பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நாட்டில் நிர்மாணத்துறையை உயர்த்துவதற்கு தேவையான பணிகளை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது செய்து வருவதாகவும், நிர்மாணத்துறையை உயர்த்துவதற்கு தேவையான நிதி மற்றும் நிதி அல்லாத தீர்வுகளை வழங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்களின் கட்டுமான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான களுத்துறை மாவட்ட ஆலோசனை சேவைகள் நடமாடும் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்துகொண்ட போதே அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சி களுத்துறை தொடங்கொட பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சின் கீழ் உள்ள நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை (CIDA) மற்றும் தேசிய கட்டுமான சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஆலோசனை சேவையை ஏற்பாடு செய்தன.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் கூறியதாவது:

“இந்த நாட்டில் கட்டுமானத் துறைக்கு பொறுப்பான ஒரே அமைச்சரவை அமைச்சு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மட்டுமே. கடந்த காலங்களில் நிர்மாணத்துறை தொடர்பில் ஆராய அமைச்சுக்களின் செயலாளர்கள் தலைமையில் 6 பிரதான குழுக்களை ஜனாதிபதி நியமித்தார். குழுக்கள் கூடி இதற்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து ஆலோசித்தன. அதற்கு ஜனாதிபதி, திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் ஆதரவு கிடைத்தது. இதன்படி, நாட்டில் நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கு எடுக்கக்கூடிய 50 முன்மொழிவுகளை அடையாளம் காண முடிந்தது. இதில் 13 முன்மொழிவுகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்கள் என ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. எனவே, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் கட்டுமானத் துறையை புதிய திசையில் திருப்புவதற்குத் தேவையான கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறோம்” எனக் கூறினார்.

உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி அவர்களை பலப்படுத்துவதே இந்த நடமாடும் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இலங்கையின் நிர்மாணத் துறையின் ஒழுங்குபடுத்துபவர் என்ற வகையில், 2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க நிர்மாண கைத்தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் விதிகளுக்கு இணங்க, நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்தக்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதைக் கையாள்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் தொழில்துறை முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, கட்டுமானத் தொழில் கடந்த காலங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நம்நாட்டு கட்டுமான ஒப்பந்ததாரர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இந்த ஆலோசனை நிகழ்ச்சி மாவட்ட அளவில் இலவசமாக நடத்தப்படுகிறது.

அதே நேரத்தில், நிர்மாணக் கைதொழில் அபிவிருத்தி அதிகாரசபை கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறமையான கட்டுமான கைவினைஞர் அடையாள அட்டையை வழங்க பதிவு செய்தது.

களுத்துறை மேலதிக மாவட்ட செயலாளர் திலங்கா வெத்தசிங்க, தொடங்கொட உதவி பிரதேச செயலாளர் அனிஷா ஷிரோமலா, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (பொறியியல் சேவைகள்) வஜிரா அபேவர்தன, தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் டேரின்டன் போல், நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர். எச். ருவினிஸ், பணிப்பாளர் நாயகம் எஸ்.கே.எஸ். அமரசேகர, நிறைவேற்றுப் பணிப்பாளர் ட்ரெவின் பெர்னாண்டோ, பணிப்பாளர் சந்திமா கருணாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முனீரா அபூபக்கர்

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026
    Editors Picks

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026

    யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தில் கல்வி கற்று வந்த கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நிரோஷினி என்ற மாணவி உயிரிழந்துள்ளார்.

    August 8, 2026

    மலையக மக்களின் காணி உரிமை: பிரதி அமைச்சின் தலைமையில் காத்திரமான ஆலோசனைகள் முன்வைப்பு!

    August 8, 2026

    குவைத் – கொழும்பு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

    August 8, 2026

    அஸ்வெசும பயனாளிகளின் நிதியை உறவினரின் கணக்கிற்கு மாற்றிய அதிகாரி: தலவாக்கலையில் பொலிஸ் விசாரணை;

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.