ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் மாநாட்டிற்கு வருகை தந்த வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழு (06) பெத்தகான ஈரநில பூங்காவிற்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர்.
5வது ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர்கள் மாநாடு இலங்கையில் ஒக்டோபர் 3ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழு அதே நேரத்தில் பெத்தகான ஈரநில பூங்காவிற்கு வந்துள்ளது.
சுற்றாடல் அமைச்சும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் சுற்றாடல் மற்றும் நிலப்பரப்புப் பிரிவும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மூலம் பெத்தகான ஈரநில பூங்கா மற்றும் ஈரநிலங்களின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்து விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மா அபேகோன், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (ஆலோசனை) ஆனந்த சமரசிங்க, பணிப்பாளர் (சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு) சந்தனா கலுபான மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

