ஹோமாகம விடுதியில் ஒன்றிலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண்ணை அவரின் காதலனே கொலை செய்துள்ளதாகவும், அந்நபர் தங்கியிருந்த விடுதியில் இருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பம் தொடர்பில் தெஹிவளையை சேர்ந்த 32 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
