லிந்துலை, ஆக்ரோவா பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபரின் தலைமையில் கடந்த 23ம் திகதி இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நுவரெலியா கல்வி வலய பிரதி கல்விப் பணிப்பாளர் கணேஸ்ராஜ் மற்றும் நுவரெலியா கோட்டம் மூன்று கல்வி பணிப்பாளர் கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் பிரதேச அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பழையமாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் இதுவரை காலம் ஆக்ரோவா பாடசாலையில் கல்வி கற்று புலமை மற்றும் ஏனைய பரீட்சைகளில் திறமையை காட்டிய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். ஊடக அனுசரணை மலையகம்.lk வழங்கியிருந்தது.

















