தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்துடன் இணைந்து மஸ்கெலியா பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட அறப்போர் நிகழ்வு இன்று (07) மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.0701.2024.
ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் 2 ஜயசிங்க, மஸ்கெலியா பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் புஷ்ப குமார மற்றும் மஸ்கெலியா பொலிஸ் பிரதேச சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், மஸ்கெலியா பிராந்திய சபையின் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்கள், பிராந்திய சுகாதாரம் உட்பட பெருந்தொகையான மக்கள் மருத்துவ அலுவலக ஊழியர்கள், மஸ்கெலியா நகர் வர்த்தகர்கள் நகரில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.







